சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்ல மாணவ, மாணவியர் இல்லத்தில் முன்னாள் குடியரசு தலைவர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் 15.10.2020 அன்று சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. நேசக்கரங்கள் இல்ல தலைவர் எஸ்.செல்லதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
இல்ல நிறுவன செயலாளர் பெரியசாமி அவர்கள் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாணவர்களுக்கு ஆற்றிய சிந்தனைகள் மற்றும் பொன்மொழிகள் பற்றி இல்ல மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். விழாவில் இல்ல மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விழாவில் அலுவலக மேலாளர் துரைசாமி, உதவி மேலாளர் கோவிந்தராஜ், இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, விடுதி வார்டன் கோமதி, பானு, மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். முடிவில் இல்ல வார்டன் மதன் நன்றி கூறினார்.